கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவரும், கழுத்து நெறிக்கப்பட்டு ஒருவரும் கொலை…!!
எப்பாவல – கோன்வெவ பிரதேசத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 60 மற்றும் 65 வயது மதிக்கத்தக்க குறித்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதில் ஒருவர் கழுத்து நெறிக்கப்பட்டும் மற்றொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஊரகஸ்மங்சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடே இந்த கொலைக்குக் காரணம் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் கஜூகஸ்துவ பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவரை எல்பிடிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating