வெயிலில் காய்ந்த நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு…!!
Read Time:1 Minute, 24 Second
மூதாட்டி ஒருவர் வீட்டு முற்றத்தில் உயிரிழந்து, இரண்டு நாட்களாக வெயிலில் காய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட சம்பவமொன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.
சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த சரவணமுத்து தெய்வநாயகி (வயது 73) என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார்; தெரிவித்தனர்.
கண் பார்வை அற்ற நிலையில் தனிமையில் வசித்து வந்த குறித்த மூதாட்டியை, உறவினர்; ஒருவர் வந்து பார்வையிட்டு செல்வது வழமை.
இந்நிலையில், வழமைப்போல் உறவினர் திங்கட்கிழமை (21) வந்து பார்த்த போது குறித்த மூதாட்டி முற்றத்தில் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் வெயிலில் காய்ந்த நிலையில் காணப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார்; சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
மரண விசாரணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Average Rating