சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்: பாட்டன், சிறிய தந்தை கைது..!!
14 வயது சிறுமியை அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் பாட்டன் மற்றும் அச்சிறுமியின் சிறிய தந்தை ஆகியோரைக் கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமம் ஒன்றில் வசிக்கும் சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டவராவார்.
தனது வகுப்பில் கல்வி பயிலும் குறித்த மாணவி எந்நேரமும் கவலையுடனும் இருப்பதை அவதானித்து வந்த வகுப்பாசிரியை, இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இவ்விடயம் முந்தல் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினருக்குத் தெரிவித்ததையடுத்து அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் போதே அச்சிறுமிக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
தான் வீட்டில் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பங்களில் தனது சிறிய தந்தை மற்றும் பாட்டன் ஆகியோர் தன்னை இவ்வாறு துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்துள்ளதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக புத்தளம் வைத்
தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு முந்தல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating