சபரிமலையில் உண்டியல் பணத்தை திருடிய கோவில் ஊழியர் கைது பணத்தை வாயில் போட்டு விழுங்கியதை கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது

Read Time:3 Minute, 34 Second

சபரிமலையில் உண்டியல் பணத்தை எண்ணும்போது திருடிய ஊழியர் கையும், களவுமாக பிடிபட்டார். அவர் ரூபாய் நோட்டை திருடியதை கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது. உண்டியலில் காணிக்கை சபரிமலையில் மண்டல பூஜை `சீசனை’ ஒட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தினசரி பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட கிï வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து திரும்புகிறார்கள். சுவாமி அய்யப்பனை தரிசிக்கும் பக்தர்கள் உண்டியலில் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள், நகைகள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகிறார்கள். எண்ணிக்கை இவ்வாறு உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகளை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்களும், பக்தர்களும், அலுவலர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் காணிக்கையை எண்ணும்போது யாரும் முறைகேடு செய்து விடக் கூடாது என்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் (குளோஸ்டு சர்க்ïட் கேமராக்கள்) வைக்கப்பட்டு உள்ளன.

இந்த காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களில் திருவாங்கூர் தேவஸ்தானத்தைச் சேர்ந்த சங்கனாச்சேரி பகுதி கோவில்களைச் சேர்ந்த கே.எஸ்.சஞ்சயன் என்பவரும் ஒருவர். இவர் அய்யப்பன் கோவிலுக்கு சிறப்பு பணிக்காக அனுப்பப்பட்டு இருந்தார்.

கையும், களவுமாக பிடிபட்டார்

பக்தர்கள் செலுத்திய காணிக்கையை மற்றவர்களுடன் சேர்ந்து இவர் எண்ணிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை நைசாக எடுத்து தனது வாய்க்குள் போட்டு விழுங்கினார். இதை அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்து விட்டது. உடனே கோவில் அதிகாரிகள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருடும் போது கையும், களவுமாகப் பிடிபட்ட சஞ்சயன் தங்கி இருந்த அறைக்கு போலீசார் அவரை அழைத்துச் சென்று அவரது பெட்டியை சோதனை போட்டனர். அப்போது அந்த பெட்டியில் 8 ஆயிரம் ரூபாயும், சில தங்க காசுகளும் மற்றும் சில விலை உயர்ந்த பொருட்களும் இருந்ததை போலீசார் கண்டு பிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்க காசுகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அவர் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சார்லி சாப்ளின் வேடத்தில் நடிக்க வேண்டும்! -ஆர்யாவின் ஆசை
Next post நள்ளிரவில் பாதாள அறையில் பெண்களை ஏமாற்றி உல்லாசம் சுருட்டு’ சாமியார் பழனிச்சாமி பற்றி திடுக்கிடும் தகவல்கள்