சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது…!!
Read Time:1 Minute, 19 Second
13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தளம், முல்லிபுரம் பிரதேசத்தில் வசிக்கக்கூடிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி சந்தேகநபரின் அயல்வீட்டில் வசித்து வருவதுடன், தேவையொன்றின் நிமித்தம் குறித்த சிறுமி சந்தேகநபரின் வீட்டிற்கு சென்ற போது துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
தனது மகளுக்கு இடம்பெற்ற சம்பவத்தை தெரிந்து கொண்ட தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Average Rating