அமெரிக்காவில் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட 2 வயது சிறுவன்…!!

Read Time:1 Minute, 34 Second

f5592615-f6ce-491e-a860-360a75e15827_S_secvpfஅமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தனது தாயாரின் கைப்பையில் இருந்த கைத் துப்பாக்கியை எடுத்து தனக்கு தானே வயிற்றில் சுட்டுக் கொண்டான்.

இதனால் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கினான். உடனே அவனை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தற்போது அவனது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இருப்பினும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்கட்ட விசாரணையில் இது ஒரு விபத்து என்றும் உள்நோக்கம் கொண்ட செயல் அல்ல என்றும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

கடந்த 2015-ம் வருடத்தில் மட்டும் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு மூலம் 13,399 உயிரிழந்துள்ளனர். இதில் 3,300 பேர் 18 வயதிற்கு உட்பட்டவர்கள்.

இதனால் துப்பாக்கி உரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை அதிபர் ஒபாமா மேற்கொண்டு வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடடே!! முட்டையை இப்படியெல்லாம் யூஸ் பண்ணலாமா…?
Next post பெல்ஜியம் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் அடையாளம் தெரிந்தது..!!