காத்தான்குடியில் காவலாளி சடலமாக மீட்பு..!!
Read Time:1 Minute, 3 Second
காத்தான்குடியில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி, கர்பலா வீதி, மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலைக்கு அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் காவலாளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
காத்தான்குடி-05ஆம் குறிச்சியைச் சேர்ந்த அப்துல் ஸலாம் (சுமார் 65 வயது) எனும் வயோதிபர் என சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Average Rating