தன்னை வல்லுறவுக்குள்ளாக்க முயன்ற நபரை தாக்கி வீட்டுச் சாவியால் முகத்தை சேதப்படுத்திய யுவதிக்கு பிரித்தானிய பொலிஸாரின் வீர விருது..!!
தன்னை வல்லுறவுக்குள்ளாக்க முயன்ற இளைஞனுடன் போராடி தனது வீட்டின் சாவியால் அந்த இளைஞனை தாக்கி காயப்படுத்திய யுவதியொருவருக்கு பிரித்தானிய பொலிஸார் வீர விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.
ஜொனதன் ஹோம்ஸ் எனும் 35 வயதான நபர், 21 வயதான யுவதியொருவரை ஷீபீல்ட் நகரில் சுமார் ஒரு ஒன்றை கிலோமீற்றர் தூரம் பின்தொடர்ந்து சென்றார். பின்னர் அந்த யுவதியை பற்றைக்குள் தள்ளி அவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதற்கு ஜொனதன் முயற் சித்தார்.
இதன்போது, ஜொனதனுடன் மோதிய மேற்படி யுவதி தனது வீட்டின் சாவியால் ஜொனதனின் முகத்தில் தாக்கினார். அத்துடன் ஜொனதனின் நாக்கையையும் கடித்து துண்டாக்கினார்.
இதன்போது ஜொனதனின் முகத்தில் ஏற்பட்ட காயங்கள் மூலம் அவர் இனங்காணப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந் நிலையில் பிரிட்டனின் தெற்கு யோர்க் ஷயர் பிராந்திய பொலிஸார் வீர நடவடிக்கைகளுக்கான விருதுக்கு மேற்படி யுவதியை தெரிவுசெய்துள்ளனர்.
இந்த யுவதியின் பெயரை வெளியிட அனுமதியில்லை. “ஆபத்தான சூழ்நிலையின் போது நீங்கள் வெளிப்படுத்திய துணிச்சலை தெற்கு யோர்க் ஷயர் பொலிஸாரான நாம் அங்கீகரிக்கிறோம்” என பொலிஸ் அத்தியட்சகர் ஸ்கொட் கிறீன் தெரிவித்துள்ளார்.
Average Rating