மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றில் இருந்து சடலமாக மீட்பு…!!

Read Time:1 Minute, 9 Second

612409552Bodyஅம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி கிராம ஆற்றில் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் ஒன்று இன்று வியாழக்கிழமை (24) மீட்கப்பட்டுள்ளது.

மாவடிப்பள்ளியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான முகம்மது இப்றாஹிம் பஸிதா (வயது 49) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.

இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார் எனவும் இவர் ஒரு மன நோயாளி எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

தற்போது அந்த சடலம் சம்மாந்துறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 6 மாத பச்சிளம் குழந்தை தண்ணீரில் நீந்தும் அற்புத காட்சி…!!
Next post விபத்தில் சிறுவன் பலி – மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்…!!