சோமாலியாவில் 65 தீவிரவாதிகள் சுட்டு கொலை…!!
ஆப்ரிக்க நாடுகளீல் ஒன்றான சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல் ஷபாப் என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. அல்கொய்தாவின் கிளை அமைப்பான ஷபாப், பன்ட்லேன்ட் என்ற பகுதியை சொந்தம் கொண்டாடி வருகிறது. இப்பகுதிக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில வருடங்களாக போரிட்டு அல் ஷபாப் என்ற தீவிரவாத இயக்கம் போரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அந்நாட்டு ராணுவம் இறங்கியுள்ளது. கடற்கரையோரம் உள்ள கர்மல், ஜூஜ் ஆகிய கிராமங்களுக்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். கடல் வழியாக படகுகள் மூலம் ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள், கிராமத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீவிரவாதிகளை சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் இரு தரப்பினர் இடையே நடந்த கடும் சண்டையில், 65 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating