கொலைச் சம்பவத்தில் இராணுவ வீரர் கைது…!!
Read Time:57 Second
தமன, பன்னல்கம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பாக சந்தேகத்தில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 17ம் திகதி தடியொன்றினால் தாக்கப்பட்டு 42வயதுடைய ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Average Rating