சார்லி சாப்ளின் வேடத்தில் நடிக்க வேண்டும்! -ஆர்யாவின் ஆசை
தான் நடித்த படமான ஆட்டோ ரிலீசுக்கு, அங்கே இங்கே கடன் வாங்கி சுமார் ஒன்றைரை கோடி வரை கொடுத்து உதவியிருக்கிறார் ஆர்யா. அந்த பணம் திரும்ப வந்ததா என்பதை பற்றி இப்போது அலச வேண்டாம். இவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது அவருக்கு? நான் கடவுள் படப்பிடிப்பு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்கள் அது நீடிக்கும் பட்சத்தில் ஆர்யா என்ற ஒரு நடிகர் இருந்தார் என்பதையே ரசிகர்கள் மறந்துவிடக் கூடிய அபாயம் இருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு படம் வந்தால், இந்த இடைவெளியை அது குறைக்கும் என்று கருதினார் அவர். ஆனால் ஆட்டோவை ரிலீஸ் செய்ய முடியாதபடி பல சிக்கல்களில் இருந்தது அந்த நிறுவனம். அதனால்தான் தன்னுடைய பங்களிப்பாக மேற்படி உதவியை செய்தாராம். இதற்கிடையில் இவரை தேடி நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கிறது. ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் ஆர்யாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இரண்டு ஹீரோ சப்ஜெக்டான இதில் நடிக்கப்போகும் இன்னொரு நடிகர் அர்ஜூன். படத்தை இயக்குவது விஷ்ணுவர்தன். அர்ஜுனோடு சேர்ந்து ஆக்ஷனில் மல்லுக்கட்ட போகிறார் ஆர்யா இந்த படத்தில். அவரது மற்றொரு ஆசை சார்லி சாப்ளின் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதுதானாம்.