சங்கரன்கோவிலில் ஒருதலைக்காதலில் விபரீதம்: காதலியை வெட்டிக்கொல்ல முயன்ற மாணவர் மர்மச்சாவு…!!

Read Time:4 Minute, 51 Second

ae41ce75-6c4b-4fa7-a98a-8153ebea2b14_S_secvpfநெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயி. இவருடைய மகன் சின்ன சொக்கலிங்கம்(வயது18). இவர், ராஜபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இதே புளியம்பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவரின் 16 வயது மகள், சங்கரன் கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார். சின்ன சொக்கலிங்கம் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

தினமும் மாணவியின் மதிய உணவை சின்ன சொக்கலிங்கம் பறித்து சென்று சாப்பிட்டு விடுவாராம். இது தொடர்பாக, அந்த மாணவி சக மாணவிகளிடம் கூறி உள்ளார். இதை அறிந்த, அந்த மாணவியின் உறவினர்கள் சின்ன சொக்கலிங்கத்தை கண்டித்து உள்ளனர்.

மாணவியின் மனதை கெடுக்காமல், நிம்மதியாக படிக்க விடு எனவும், அந்த உறவினர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சின்ன சொக்கலிங்கம், கடந்த கடந்த மாதம் 14– ந் தேதி காதலர் தினத்தன்று காலையில் திடீரென மாணவியின் வீட்டுக்குள் சென்று உள்ளார்.

திடீரென அவரை அவதூறாக பேசியவாறு, மாணவியை அடித்து உதைத்ததுடன், கையில் கொண்டு சென்ற கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்து உள்ளார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் மற்றொரு அறையில் இருந்த, அவருடைய தாயார் ஓடி வந்து தடுத்து உள்ளார். மாணவியின் தாயாரை கீழே பிடித்து தள்ளிய சின்ன சொக்கலிங்கம், அவரை கயிற்றால் சரமாரியாக அடித்து உதைத்து உள்ளார். மாணவி மற்றும் அவருடைய தாயாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால், சின்ன சொக்கலிங்கம் தப்பி ஓடி விட்டார்.

இது தொடர்பாக சங்கரன் கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன சொக்கலிங்கத்தை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த சின்ன சொக்கலிங்கம் நேற்று முன்தினம் மீண்டும் மாணவியின் வீட்டுக்கு சென்று தகராறு செய்ததோடு மாணவியை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதனால் சின்ன சொக்கலிங்கம் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். காயம் அடைந்த மாணவி சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி சங்கரன்கோவில் டவுண் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னசொக்கலிங்கத்தை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சங்கரன்கோவில் ரெயில் நிலையம் அருகே ஒரு மரத்தில் சின்ன சொக்கலிங்கம் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சமபவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மீண்டும் போலீசார் தன்னை கைது செய்வார்கள் என பயந்து சின்ன சொக்கலிங்கம் தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டாரா என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீடு புகுந்து திருடிவிட்டு காரின் அடியில் பதுங்கிய கொள்ளையன் சிக்கினான்…!!
Next post அம்பையில் தொழிலாளி கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவி கைது…!!