அம்பையில் தொழிலாளி கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவி கைது…!!
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கீழப்பாப்பாக்குடியை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது35). இவருக்கு சுடலி (எ) உமா (32) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சுடலிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விவரம் ஆதிநாராயணனுக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.
இந்த நிலையில் ஆதிநாராயணன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் வீட்டை காலி செய்து விட்டு கீழப்பாப்பாக்குடியில் இருந்து அம்பாசமுத்திரம் வேலாயுத நகர் பிள்ளையார் கோவில் தெருவில் குடியேறினார்.
நேற்று நள்ளிரவில் ஆதிநாராயணன் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஆறுமுகம், ஆதிநாராயணனுடன் தகராறு செய்தார். அதில் ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஆதிநாராயணனை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ஆதிநாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து அம்பை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தையும், அதற்கு உடந்தையாக இருந்த ஆதிநாராயணன் மனைவி சுடலி (எ) உமா மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் இன்று போலீசார் உமாவை கைது செய்தனர். ஆறுமுகத்தை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Average Rating