சுவிஸில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்! 12 பேர் பரிதாப பலி..!!
சுவிஸில் நள்ளிரவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு ஈஸ்டர் விடுமுறையையொட்டி ப்ரைபோர்க் மண்டலத்தின் ரோமொண்ட் என்ற இடத்தில் இருந்து 12 பேருக்கும் அதிகமானோர் சிற்றுந்தில் போர்த்துக்கலுக்கு கிளம்பியுள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவில் Montbeugny என்ற இடத்திற்கு அருகில் அந்த சிற்றுந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ட்ரக்குடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 12 பேர் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 7ல் இருந்து 70 வயதுக்குட்பட்டோர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ட்ரக்கில் இருந்த இத்தாலியை சேர்ந்த இருவர் மற்றும் அந்த சிற்றுந்தின் டிரைவர் காயத்துடன் தப்பியுள்ளனர்.
விபத்தில் பலியானவர்கள் அனைவரும் போர்த்துக்கல் குடிமக்கள் தான் என்பதை போர்த்துக்கல் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான விசாரணையில், சிற்றுந்தின் டிரைவர் பாதை மாறி சென்றதே ட்ரக்குடன் மோதி விபத்து ஏற்பட காரணம் என்று தெரியவந்துள்ளது.
இந்த பயங்கர விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating