வாய்க்காலில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி வாலிபர் பலி…!!
Read Time:1 Minute, 2 Second
கோபி அருகே உள்ள கலிங்கியத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற தவசியப்பன் (வயது 29). மாற்றுத்திறனாளி. இன்னும் திருமணமாகவில்லை.
கடந்த 24–ந்தேதி காலை இவர் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று கூறிக்கொண்டு போனவர் வீட்டுக்கு திரும்பவில்லை.
அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.
இந்த நிலையில் தவசியப்பன் உடல் அப்பகுதியில் உள்ள தடப்பள்ளி வாய்க்காலில் மிதந்தது தெரிய வந்தது.
அவர் வாய்க்காலில் இறங்கி குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating