ஆரணி அருகே மாணவிகளிடம் சில்மிஷம்: கைதான தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு…!!
ஆரணி கொசப்பாளையம், கோவிந்தராஜன் தெருவில் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 5 மாணவர்கள், 12 மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக அசோகன் (வயது 48), உதவி ஆசிரியராக ரேகா ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். கடந்த வாரம் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
விழாவில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு நடன பயிற்சி அளிப்பதாக கூறி தலைமை ஆசிரியர் அசோகன் தனி அறைக்கு அழைத்து சென்று மாணவிகளிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டு உள்ளார். அப்போது மாணவிகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் நடனத்தில் கவனம் செலுத்தி உள்ளனர். பள்ளி ஆண்டு விழாவும் முடிந்துவிட்டது.
இந்த நிலையில் அந்த பள்ளியில் 5–ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலருக்கு வீட்டில் வைத்து சீறுநீர் கழிக்கும்போது அதிக அளவில் வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. அதை கவனித்த பெற்றோர்கள், என்ன நடந்தது என்று மாணவிகளிடம் கேட்டுள்ளனர்.
அப்போது மாணவிகள் பள்ளியில் ஆண்டு விழாவின்போது தலைமை ஆசிரியர் அசோகன் எங்களிடம் தவறாக நடந்து கொண்டார். மேலும் எங்கள் உடலில் பல இடங்களில் கடித்து வைத்தார் என்று பல் தடங்களை பெற்றோர்களிடம் மாணவிகள் காட்டினார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் கேட்டனர். அப்போது தலைமை ஆசிரியர் அவர்களை தரக்குறைவாக பேசி பள்ளியை விட்டு வெளியே செல்லும்படி கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தலைமை ஆசிரியரை தாக்கினர். மேலும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து போலீசாரும், கல்வி அதிகாரிகளும் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தலைமை ஆசிரியர் அசோகன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் தலைமை ஆசிரியர் அசோகனை கைது செய்தனர்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் அசோகனை சஸ்பெண்டு செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் உத்தரவிட்டார்.
Average Rating