14 வயது சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது…!!

Read Time:1 Minute, 35 Second

c2acebc3-cf63-41af-8268-2aef1c4eccf9_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 14 வயது தலித் சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்குள்ள மைன்புரி மாவட்டத்தில் கடந்த 24-ம் தேதி ஹோலி பண்டிகையின்போது நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தை பணத்தால் மூடிமறைக்க போலீஸ் காண்ஸ்டபிளான ராஜேஷ் யாதவ்(48) முயற்சித்துள்ளார். உள்ளூர் போலீஸ் நிலையத்தில் அவர் அளித்த புகார் ஏற்கப்படவில்லை.

இந்த சமரசத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த சிறுமியின் தந்தை, மைன்புரி மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட்டிடம் இதுதொடர்பாக புகார் அளித்தார். கூடுதல் சூப்பிரண்ட் திகம்பர் குஷ்வஹாவின் உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்த கொத்வாலி பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் நேற்று மாலை ராஜேஷ் யாதவை கைது செய்தார்.

கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேஷ் யாதவ், விசாரணை காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுக்கோட்டை அருகே 7 வயது மகனை கொன்று தாய் தற்கொலை: போலீசார் விசாரணை…!!
Next post போளூரில் விவசாயி வெட்டிக்கொலை: நிலத்தகராறில் அண்ணன் வெறிச்செயல்..!!