போளூரில் விவசாயி வெட்டிக்கொலை: நிலத்தகராறில் அண்ணன் வெறிச்செயல்..!!

Read Time:1 Minute, 26 Second

downloadபோளூர் அருகே உள்ள செங்கோணம் கொல்லை மேடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன்கள் மணிமாறன் (வயது40) கார் மேகம் (வயது35) விவசாயம் செய்து வந்தனர்.

நிலத்தகராறு சம்பந்தமாக மணிமாறன், கார்மேகம் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று மாலை சகோதரர்கள் இருவரும் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மணிமாறன் அரிவாளால் கார்மேகத்தின் கழுத்தில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் தரையில் சாய்ந்த கார்மேகம் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாத், போளூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார்மேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14 வயது சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது…!!
Next post குடிபோதையில் 4 வயது பேத்தியை தொலைத்த பாட்டி: போலீசார் மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர்..!!