குடிபோதையில் 4 வயது பேத்தியை தொலைத்த பாட்டி: போலீசார் மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர்..!!

Read Time:2 Minute, 36 Second

imagesவிழுப்புரத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மனைவி மேரி இறந்துவிட்டார். இவர் தனது 4 வயது மகளுடன் சைதாப்பேட்டையில் தங்கி கூலிவேலை செய்துவந்தார்.

சார்லசின் தாயார் தனது பேத்தியை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு தாம்பரம் வந்தார்.

அப்படி வந்த இடத்தில் ஒரு மதுபான கடைக்கு சென்று அளவுக்கு அதிகமாக மது குடித்தார். இதனால் அவருக்கு போதை அதிகமானது. தாம்பரம் பஸ் நிலையத்தில் நள்ளிரவில் மது போதையில் அவர் மயங்கி விழுந்தார். அவரது அருகில் 4 வயது குழந்தை உட்கார்ந்து கொண்டு பாட்டியை எழுப்ப முயன்றது. ஆனால் அவர் போதை தெளியாததால் எழுந்திருக்கவில்லை.

பஸ் நிலையத்தில் நின்ற சிலர் அவர் மீது தண்ணீர் ஊற்றியும் போதை தெளியவில்லை. பாட்டி போதை மயக்கத்தில் கிடக்க, பக்கத்தில் சிறுமி அழுதபடி உட்கார்ந்து இருந்தது. இதைப்பார்த்த சிலர் பிச்சைக்காரர்கள் என நினைத்து காசு போட்டுச்சென்றனர்.

இந்த காட்சிகளை நீண்டநேரமாக பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு விரைந்து, பெண் குழந்தையை அழைத்துச் சென்று ஒரு தொண்டு நிறுவனத்தில் தங்கவைத்தார்.

சிறிது நேரத்தில் போதை தெளிந்த பாட்டி குழந்தையை காணவில்லை என கூறி சைதாப்பேட்டைக்கு சென்று உறவினர்களிடம் தெரிவித்தார்.

விடிந்ததும் குழந்தையை தேடி தாம்பரம் வந்த சார்லசிடம் பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் போலீசார் அழைத்துச் சென்றதாக கூறினர்.

குழந்தையின் போட்டோவுடன் சார்லஸ் போலீஸ் நிலையம் சென்று விசாரிக்க, அவருக்கு அறிவுரை கூறி குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போளூரில் விவசாயி வெட்டிக்கொலை: நிலத்தகராறில் அண்ணன் வெறிச்செயல்..!!
Next post நாம் தினமும் பயன்படுத்தும் சோப்பில் கூட இவ்வளவு பிரச்சனையா…?