நண்பனின் மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது..!!
புதிதாகத் திருமணமான தனது நண்பனின் மனைவியை பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் நிக்கவெரட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கொபேஹேன பொலிஸாரால் தெரிவித்தனர்.
வீட்டில் தனியாக இருந்த நண்பனின் மனைவியையே இவ்வாறு சந்தேக நபர் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
தனது நண்பன் வீட்டில் இல்லாத சமயம் அவ் வீட்டுக்குச் சென்றுள்ள சந்தேக நபர் நண்பரின் புதிதாகத் திருமணமான மனைவியிடம் அருந்துவதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.
தண்ணீர் எடுப்பதற்காக சமையலறைக்குச் சென்ற நண்பனின் மனைவியைப் பின்தொடர்ந்து சென்ற சந்தேக நபர் அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளமை கொபேஹேன பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட யுவதியின் கணவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் அறிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதி வைத்திய பரிசோதனைக்காக நிக்கவெரட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொபேஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating