கடத்தப்பட்ட விமானத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுடன் எகிப்து பிரதமர் சந்திப்பு…!!
Read Time:1 Minute, 11 Second
சைப்ரஸ் நாட்டுக்கு நேற்று கடத்தப்பட்ட விமானத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை சைப்ரஸ் நாட்டுக்கு சென்று எகிப்து பிரதமர் ஷெரிப் இஸ்மாயில் சந்தித்து பேசினார்.
அலெக்சாண்டியாவில் இருந்து கெய்ரோ சென்றுகொண்டிருந்த எகிப்துஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் விமானம் நேற்று 62 பேருடன் கடத்தப்பட்டது. அதை கடத்திய சையதின் முஸ்தபா என்பவருடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர் போலீசில் சரணடைந்தார். இதையடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் எகிப்து விமானப் போக்குவரத்துத்துறை மந்திரியுடன் சைப்ரஸ் நாட்டுக்கு சென்ற எகிப்து பிரதமர் ஷெரிப் இஸ்மாயில் சந்தித்துப் பேசி, ஆறுதல் கூறினார்.
Average Rating