நடுரோட்டில் பெண் தீக்குளித்து தற்கொலை
காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரே நடத்தையில் சந்தேகம் கொண்டதால் விரக்தியடைந்த மனைவி நடு ரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி மேட்டுபாளையம் பால்வாடி வீதியை சேர்ந்தவர் பிரபு(24). இவரது மனைவி வனிதா(20). இரண்டு ஆண்டிற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பிரபு, தனது மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்டார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது வந்தது. நேற்று முன்தினம் மதியம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பிரபு வனிதாவை தாக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த வனிதா அன்று மாலை நடுரோட் டில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வனிதாவை காப் பாற்றி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார். இது குறித்து மேட்டுபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் வனிதாவிற்கு திருமணமாகி இருண்டு ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையா என்பது குறித்து தாசில்தார் விசாரித்து வருகிறார்.