பாம்பை விட்டு கடிக்கச் செய்து மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை
பாம்பை விட்டு கடிக்கச் செய்து மனைவியை கொலை செய்த கணவன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பாம்பாட்டி ஆகியோருக்கு மேற்கு வங்க கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சயத் மாலிக். இவரது மனைவி ஹவா பிபி. சயத் மாலிக் தனது மனைவி ஹவா பிபியை கொல்வதற்காக அவர் துõங்கும் போது, ஒரு நாகபாம்பை அவரது படுக்கையில் விட்டு கடிக்கச் செய்து கொலை செய்துள்ளார். இதில் அவரது மனைவி பலியானார். இது தொடர்பான விசாரணையில் சயத் மாலிக், ஹவா பிபியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இந்த உறவில் விரிசல் ஏற்பட்டதால், முதல் மனைவியிடம் சென்று விட முடிவு செய்து, தனது இரண்டாவது மனைவியை கொலை செய்துள்ளார். இதற்காக பாம்பாட்டி கோபால் என்பவரிடம் இருந்து 500 ரூபாய்க்கு பாம்பை பெற்று, ஹவா பிபி துõங்கிக் கொண்டிருந்த போது அவரது படுக்கைக்குள் பாம்பை விட்டு கடிக்கச் செய்து கொலை செய்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த மேற்குவங்க கோர்ட், நுõதன முறையில் மனைவியை கொலை செய்த கணவர் சயத் மாலிக் மற்றும் பாம்பாட்டி கோபால் சேக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.