மயிலாடுதுறை அருகே மது பாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது..!!
Read Time:1 Minute, 3 Second
மயிலாடுதுறை அருகே நடந்த வாகன சோதனையில் மது பாட்டில்கள் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே உள்ள செம்மனார்கோவில் பகுதியில் மதுவிலக்கு பிரிவு (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் கார்வீன்ராஜ் ஜெகதீஸ்குமார் தலைமையில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைகாலில் இருந்து வந்த மினிலாரியை சோதனையிட்டதில் 32 பெட்டிகளில் 1500 மதுபாட்டில்கள் இருந்தன.
இதைத் தொடர்ந்து மினிலாரியை ஒட்டிவந்த காரைகாலை சேர்ந்த மணிவண்னண். (28). ராஜ்குமார்(46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கடத்திவந்த மது பாட்டில் களை பறிமுதல் செய்தனர்.
Average Rating