டெல்லியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை கற்பழித்த நைஜீரியா வாலிபர் மீது போலீசில் புகார்…!!
தமிழ்நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை திருமண ஆசைகாட்டி கற்பழித்ததாக நைஜீரியாவைச் சேர்ந்த வாலிபர்மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த இளம்பெண் புனே நகரில் வேலைசெய்து வந்தபோது அந்த நைஜீரியா வாலிபரை சந்தித்துள்ளார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்து, டெல்லி உத்தம்நகர் பகுதியில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு ஏழு மாதங்களாக கணவன்-மனைவிபோல் வாழ்ந்து வந்துள்ளனர்.
சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த அந்த இளம்பெண், டெல்லியில் இருக்கும் தனது காதலருக்கு பலமுறை போன் செய்தும், அழைப்பை ஏற்கவில்லை. இதனால், அவர் உடனடியாக டெல்லிக்கு திரும்பிவந்தபோது, உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என அவர் மறுத்து விட்டார்.
எனவே, பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், திருமண ஆசைகாட்டி நைஜீரியாவைச் சேர்ந்த அந்த வாலிபர் தன்னை கற்பழித்து விட்டதாக டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating