பிறந்து 10 நாளே ஆன குழந்தையை ஓ.எல்.எக்ஸ். மூலம் விற்க முயன்ற தந்தை: போலீசில் சிக்கியதும் ஜோக் என்கிறார்…!!

Read Time:2 Minute, 6 Second

201604021705086064_Dad-arrested-after-he-tries-to-sell-his-own-10-day-old_SECVPFபிறந்து 10 நாளே ஆன பச்சிளம் குழந்தையை ஓ.எல்.எக்ஸ். இணையதளம் மூலம் விற்பனை செய்ய முயன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்

தென்கிழக்கு பிரேசிலில் உள்ள பேலோ ஹரிசான்டி நகரை சேர்ந்தவர் அபிமாயல் கோஸ்டா. இவர் 3 குழந்தைகளுக்கு தந்தையாவார். இவர் மனைவி பியாமா அபரேசிடாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் பிறந்து 10 நாட்கள் ஆன அந்த குழந்தையை விற்பதற்கு ஓ.எல்.எக்ஸ். விளம்பர பக்கத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார் கோஸ்டா.

அந்த பக்கத்தில் குழந்தையின் படத்தை போட்டு அதில், ‘நான் எனது 10 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்பனை செய்கிறேன். குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளது’ என கூறி இருந்தார்.

இது ஒரு அசத்தும் முதலீடு, விலை குறித்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். இது குறித்து போலீசாருக்கு பலர் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அவரை கண்டுபிடித்து விசாரித்தனர். முதலில் மறுத்த கோஸ்டா பின்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனால், இதனை வேடிக்கையாக செய்ததாக கூறி சமாளித்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இது குறித்து குழந்தையின் தாயார் பியாமா கூறும்போது, ‘இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். என்ன காரணத்திற்காக அவர் இதை செய்தார் என்று எனக்கு தெரியவில்லை’ என கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி சென்றடைந்தார் பிரதமர் மோடி…!!
Next post வரும் 2050-ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்: அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!