சிறுவன் கிணற்றில் விழுந்து பலியானமை குறித்து விசாரணை…!!
Read Time:50 Second
நுவரெலியாவின் – லவர்ஸ்லிப் தோட்டத்தில் சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சம்பவத்தில் பலியாகியது 4 வயதான பிள்ளை என தெரியவந்துள்ளது.
சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
Average Rating