பலத்த காற்றுடனான மழையால் இரு வீடுகள் சேதம்…!!
Read Time:1 Minute, 24 Second
அக்கரப்பத்தனை சென் ஜோர்ஜ் தோட்டத்தில் நேற்று (02) மாலை 03.00 மணி முதல் 06.00 மணி வரை ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய அடை மழையினால் வீடுகள் சிலவற்றின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டுச் சென்றுள்ளன.
இரண்டு வீடுகளின் கூரைகள் முழுமையாக காற்றினால் சேதமாகியுள்ளது. இதனால் அக் குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேர் பாதிப்படைந்துள்ளனர்.
அத்தோடு மரங்களும் முறிந்து விழுந்துள்ளது. குறித்த கூரைகள் காற்றினால் அள்ளுண்டு அப் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் சிக்கியதால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் உறவினர்களின் வீட்டில் தற்காலிகமாக தங்கவைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுக்கு தோட்ட நிர்வாகமும், நுவரெலியா பிரதேச செயலகத்தின் மூலமும் உதவிகளை வழங்குவதற்கு தோட்ட உதவி அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
Average Rating