ஜோலார்பேட்டை அருகே 7–ம் வகுப்பு மாணவன் கொலை…!!

Read Time:2 Minute, 38 Second

201604021705453998_seventh-standard-student-murdered-in-vellore_SECVPFஜோலார்பேட்டை அருகே திருட்டை காட்டிக் கொடுத்த 7–ம் வகுப்பு மாணவன் கொலை செய்து பிணத்தை ஏரியில் வீசி சென்றனர்.

ஜோலார்பேட்டையை அடுத்த குடியான குப்பம் கிராமத்தில் உள்ள ஏரியில் இன்று காலை சிறுவன் ஒருவனின் பிணம் மிதந்தது.

அந்த வழியாக சென்ற சிலர் திருப்பத்தூர் தீயணைப்பு துறைக்கும், ஜோலார்பேட்டை போலீ சாருக்கும் தகவல் கொடுத் தனர்.

ஏரியில் இருந்து பிணத்தை போலீசார் மீட்டனர். இறந்த சிறுவனின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந்தது. சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டு, பிணம் ஏரியில் வீசப்பட்டது தெரியவந்தது.

பிணமாக மிதந்த சிறுவன் குடியான குப்பத்தை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரி யர் சரவணனின் மகன் சத்திய மூர்த்தி (வயது 13) என்று தெரியவந்தது. சத்தியமூர்த்தி நாட்டறம்பள்ளி பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த கொலை தொடர் பாக சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த சசிக் குமார் (வயது 23) என்ப வரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவன் சத்தியமூர்த்தியை கொலை செய்து ஏரியில் வீசியதை ஒப்புக் கொண்டார். போலீசாரிடம் சசிக்குமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

சத்தியமூர்த்தி நேற்று மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டான். அப்போது நான் ஒரு பைக்கை திருட முயற்சி செய்தேன். இதை கவனித்த சத்தியமூர்த்தி கத்தி கூச்சலிட்டான். இதனால் பயந்துபோன நான் அவனை கடத்தி சென்று அடித்துக் கொலை செய்தேன்.

கொலையை மறைக்க பிணத்தை ஏரியில் வீசினேன். பின்னர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் சசிக்குமாரை கைது செய்தனர். மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நன்னிலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…!!
Next post பசிபிக் கடல்பகுதியில் உள்ள வனுவாட்டு நாட்டில் 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை…!!