பீகார் காப்பகத்தில் இருந்து ஆறு இளம்சிறார் குற்றவாளிகள் தப்பியோட்டம்…!!
Read Time:1 Minute, 20 Second
பீகார் மாநிலம், ஆரா மாவட்டத்தில் உள்ள இளம்சிறார் காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு சிறுவர்கள் ஜன்னல் கம்பியை வளைத்து தப்பியோடி விட்டனர்.
ஆரா மாவட்டம், தனுப்பாரா பகுதியில் உள்ள அரசு இளம்சிறார் காப்பகத்தில் குற்றவழக்கில் கைதாகும் 18 வயதுக்குட்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களும், தண்டனை பெற்றவர்களும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை வழக்கம்போல் இங்குள்ள சிறுவர்களை கணக்கெடுக்கச் சென்ற அலுவலர்கள் ஆறு பேர் காணாமல் போயிருந்ததை அறிந்து திடுக்கிட்டனர். ஜன்னலில் உள்ள இரும்பு கம்பியை வளைத்து, நேற்றிரவு அவர்கள் தப்பியோடியுள்ளது தெரியவந்ததும், இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார்ம் தப்பியோடிய ஆறு இளம்சிறார் குற்றவாளிகளையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating