தலித் சிறுமியை கற்பழித்துக் கொன்ற உடற்கல்வி ஆசிரியர் கைது..!!
Read Time:55 Second
ராஜஸ்தான் மாநிலம், பிகானர் மாவட்டம், நோக்கா பகுதியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்துவந்த தலித் சிறுமி, அந்த கல்லூரி விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் கடந்த திங்கட்கிழமை பிணமாக மிதந்தார்.
இந்த மர்ம மரணம் தொடர்பாக விசாரித்துவந்த போலீசாருக்கு அதே கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியரால் அவர் கற்பழித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, விஜேந்திர சிங் என்பவரை கைது செய்த மாவட்ட போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் காவலில் எடுத்து, விசாரித்து வருகின்றர்.
Average Rating