மனைவியை அழைக்க கள்ளக்காதலன் வீட்டுக்குச் சென்ற கணவர் கொடூர கொலை..!!

Read Time:2 Minute, 26 Second

imagesமனை­வியை அழைத்து வரச் சென்ற கணவர் அவ­ரது கள்­ளக்­கா­த­லனால் கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

சித்தூர் மாவட்டம், மத­ன­பல்லி அடுத்த நட்­க­ல­பிந்து பகு­தியை சேர்ந்­தவர் ரமேஷ்­நாயக் (32). இவ­ருக்கும் பாலம்மாள் என்­ப­வ­ருக்கும் கடந்த 13 ஆண்­டு­க­ளுக்கு முன்பு திரு­மணம் நடந்­துள்­ளது.

இவர்­க­ளுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்­நி­லையில், கடந்த 6 மாதங்­க­ளுக்கு முன்பு பாலம்­மா­ளுக்கு, அதே பகு­தியை சேர்ந்த முர­ளி­நாயக் என்­ப­வ­ருடன் கள்­ளத்­தொ­டர்பு ஏற்­பட்­டது.

இதனால் கணவர் மற்றும் மகளை பிரிந்து முர­ளி­நா­யக்­குடன், பாலம்மாள் கடந்த 6 மாத­மாக குர­வணா பகு­தியில் வசித்து வந்­துள்ளார்.

நேற்று முன்­தினம் ரமேஷ்­நாயக், முர­ளி­ நா­யக்கை தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு தன் மனைவி பாலம்­மாளை தன்­னுடன் அனுப்பி வைக்­கு­மாறு கேட்­டுள்ளார். அதற்கு முர­ளி­நாயக் தனது வீட்­டுக்கு வந்து அழைத்து செல்­லு­மாறு கூறி­யுள்ளார்.

அதன்­பேரில் கடந்த வாரம் ரமேஷ்­நாயக் மனை­வியை அழைத்து வர முர­ளி­நா­யக்கின் வீட்­டுக்குச் சென்­றுள்ளார்.

அப்­போது வீட்­டி­லி­ருந்த முர­ளி­நாயக் மற்றும் அவ­ரது தங்கை சுஜாதா ஆகியோர் பாலம்­மாளை அனுப்ப முடி­யாது என கூறி தக­ராறில் ஈடு­பட்­டுள்­ளனர்.

அப்­போது ஆத்­தி­ர­ம­டைந்த இரு­வரும், ரமேஷ்­நா­யக்கை கத்­தியால் சர­மாரியாக குத்­தி­யுள்­ளனர்.

இதில் படு­கா­ய­ம­டைந்த அவர் சம்­பவ இடத்­தி­லேயே பரி­தா­ப­மாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மதனபல்லி நகர பொலிஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய அண்ணன், தங்கையை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட படத்தைப் பார்த்து பெண்ணின் வீட்டுக்கு விரைந்து சென்ற குண்டு செயலிழப்புப் பிரிவினர்..!!
Next post சிரியாவில் ஆளில்லா விமான தாக்குதல்: அல்கொய்தா தலைவர் அபு பிராஸ் பலி..!!