மனைவியை அழைக்க கள்ளக்காதலன் வீட்டுக்குச் சென்ற கணவர் கொடூர கொலை..!!
மனைவியை அழைத்து வரச் சென்ற கணவர் அவரது கள்ளக்காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
சித்தூர் மாவட்டம், மதனபல்லி அடுத்த நட்கலபிந்து பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்நாயக் (32). இவருக்கும் பாலம்மாள் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாலம்மாளுக்கு, அதே பகுதியை சேர்ந்த முரளிநாயக் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதனால் கணவர் மற்றும் மகளை பிரிந்து முரளிநாயக்குடன், பாலம்மாள் கடந்த 6 மாதமாக குரவணா பகுதியில் வசித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் ரமேஷ்நாயக், முரளி நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன் மனைவி பாலம்மாளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு முரளிநாயக் தனது வீட்டுக்கு வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
அதன்பேரில் கடந்த வாரம் ரமேஷ்நாயக் மனைவியை அழைத்து வர முரளிநாயக்கின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது வீட்டிலிருந்த முரளிநாயக் மற்றும் அவரது தங்கை சுஜாதா ஆகியோர் பாலம்மாளை அனுப்ப முடியாது என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஆத்திரமடைந்த இருவரும், ரமேஷ்நாயக்கை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மதனபல்லி நகர பொலிஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய அண்ணன், தங்கையை தேடி வருகின்றனர்.
Average Rating