குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து தோழியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய இளம்பெண்..!!
இந்தியா – கர்நாடகாவின் துமகூரு மாவட்டம் திப்டூர் நொனவினகெரே ரங்கையனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா 21, பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவரது தோழி லாவண்யா.கடந்த 24ம் திகதி லாவண்யா, தோழி திவ்யாவிடம் தனியாக பேசவேண்டுமென்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு இவர்களின் வருகையை எதிர்நோக்கி வாலிபர்கள் 2 பேர் தயாராக இருந்ததாக கூறப்படுகிறதுஅவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த திவ்யா இவர்கள் யார் என்று கேட்டுள்ளார்.
அதற்கு லாவண்யா, அவர்கள் தனது நண்பர்கள் என்று கூறி அறிமுகம் செய்துள்ளார். 4 பேரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தபோது, லாவண்யா,திவ்யாவிற்கு குடிப்பதற்காக குளிர்பானம் ஒன்றை கொடுத்தார்.
அதை வாங்கி குடித்த சில நிமிடங்களில் திவ்யா, மயங்கி விழுந்தார்.
மாலையில் நடந்த இச்சம்பவத்தால் திவ்யா வீட்டிற்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
பெற்றோர் அவரை நண்பர்கள் மற்றும் தோழி வீடுகளில் தேடி பார்த்தனர். நள்ளிரவு வரை கிடைக்கவில்லை.
நேற்று காலை இது தொடர்பாக பெற்றோர், பொலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க இருந்த நிலையில், ரங்கையனஹள்ளி சாலையோரம், அலங்கோலமான நிலையில் திவ்யா, மயங்கி கிடந்தார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற பெற்றோர் அவரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில், திவ்யா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திப்டூர் பொலீசாருக்குதகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலீசார், விசாரித்ததில், லாவண்யா என்ற தோழிதான் தன்னை அழைத்து சென்று இந்த நிலைக்குஆளாக்கியிருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து லாவண்யாவை அழைத்து பொலீசார் விசாரித்தபோது, அவர்கள், நண்பர்கள் வேண்டுகோள் விடுத்ததால், திவ்யாவிற்கு மயக்க மாத்திரை கலந்து குளிர்பானம் கொடுத்ததாக தெரிவித்தார்.
அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட பொலீசார், துரிதமாக நடவடிக்கை எடுத்து, லாவண்யா மற்றும் அவரது நண்பர் ரேணுகேஷ் (23), லோகேஷ் (22) ஆகிய 3பேரை கைது செய்தனர்.
3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த பொலீசார் வாலிபர்களை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து திப்டூர் பொலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating