கரத்தில் நோய்த் தொற்று ஏற்படுவதை தடுக்க அதனை வயிற்றுக்குள் வைத்து தைத்த மருத்துவர்கள்..!!
தொழிற்சாலை விபத்தொன்றில் கையின் ஒரு பகுதியில் தோல் முழுவதும் உரிக்கப்பட்ட நிலைக்குள்ளான நபரொருவருக்கு, அவரது அந்தக் கரப் பகுதியில் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்க அதனை அவரது வயிற்றுப் பகுதிக்குள் வைத்து மருத்துவர்கள் தைத்த சம்பவம் தென் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
தொழிற்சாலையொன்றில் இயந்திரத்தை செயற்படுத்தும் பிரிவில் கடமையாற்றி வந்த கார்லொஸ் மரியோற்றி (42 வயது) என்ற மேற்படி நபர், சம்பவ தினம் பணியாற்றிக் கொண்டிருந்த போது இயந்திரத்தில் அவரது கரம் சிக்கியதால் அந்தக் கரத்தின் முன் பகுதியிலுள்ள தோல் முழுவதும் உரிந்து சேதமடைந்தது.
இதனையடுத்து ஒர்லீன்ஸ் பிராந்தியத்திலுள்ள சாந்த ஒலிதியா மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் அவரது தோல் உரிந்த கரப் பகுதியில் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்க, அது அவரது வயிற்றுக்குள் உட்செலுத்தப்பட்டு தைக்கப்பட்டது.
வழமையாக இத்தகைய சந்தர்ப்பங்களின் போது, தோலுரிந்த கரப் பகுதியில் நோய்த் தொற்று ஏற்பட்டு உடலின் ஏனைய பகுதிகளுக்கு பரவுவதை தடுக்க அந்தக் கரப் பகுதியை துண்டிக்க மருத்துவர்கள் சிபாரிசு செய்வார்கள். ஆனால் பிரேசில் மருத்துவர்களோ அந்தக் கரத்தை எவ்வாறாவது பாதுகாக்க வேண்டும் என்ற முயற்சியில் மேற்படி புரட்சிகர அறுவைச் சிகிச்சையை அவருக்கு மேற்கொண்டுள்ளனர்.
அந்தக் கரப் பகுதி, அதன் மேற்பரப்பில் பாதுகாப்புக் கவசமாக மென்மையான தோல் படலம் உருவாகும் வரை 6 வாரங்களுக்கு இவ்வாறு அவரது வயிற்றுப்பகுதியில் புதையுண்ட நிலையில் இருக்க வுள்ளது.
Average Rating