மற்றொரு பெண்ணுடன் தொடர்புகொண்டிருந்த கணவர் மீது மனைவி துப்பாக்கிச் சூடு; கணவரின் விதையை குண்டு தாக்கியது..!!
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவரின் விதையில் துப்பாக்கியால் சுட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த விக்டோரியா றீட் எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பெண்ணும் அவரின் கணவரும் 16 வருடங்களாக இணைந்து வாழ்வதாகவும் தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் முறையற்ற தொடர்பு கொண்டிருப்பதை அறிந்ததையடுத்து கணவர் மீது விக்டோரியா தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது கணவரை அமரவைத்து தாக்குதல் நடத்திய விக்டோரியா றீட், அவரை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தினாராம்.
முகத்திலும் நெஞ்சிலும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்போவதாகவும் அவர் கூறினார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறுதியில் கணவரை முடமாக்கப்போவதாகக் கூறிய விக்டோரியா, கணவரின் இடது முழங்காலை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்.
ஆனால், துப்பாக்கிக் குண்டு கணவரின் தொடைக்கு ஊடாகச் சென்று, அவரின் விதைகளில் புதையுண்டது என தெரிவித்துள்ளது.
அக்கணவரின் நிலை என்னவாகியது என்பது தெரியவில்லை. எனினும், விக்டோரியா றீட் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Average Rating