மனைவியுடன் தகராறு; வீட்டை தீயிட்டுக் கொழுத்திய கணவன்..!!
Read Time:1 Minute, 11 Second
மூதூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அக்கரைச்சேனை பகுதியில் மனைவியுடன் சண்டையிட்டு விட்டு வீட்டுக்கு தீயிட்டு கொழுத்தி பொருட்களுக்கு சேதப்படுத்திய 25 வயது ஒருவரை மூதூர் பொலிஸார் இன்று செவ்வாய் கிழமை கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் நேற்று இரவு மனைவியுடன் வாய்தகராரில் ஈடுபட்டு ஆத்திரமடைந்த கணவன் வீட்டுக்கு தீயிட்டு கொழுத்தியுள்ளார்.
இதனால் குறித்த வீட்டின் கூரை, தளபாடங்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் சேதமாகியுள்ளன.
கணவனின் செயற்பாட்டில் ஆத்திரமடைந்த மனைவி மூதூர் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கமைய அவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating