திருவனந்தபுரம் அருகே செல்போனில் ஆபாசபடம் எடுத்து இளம்பெண்ணை மிரட்டி விபசாரத்தில் தள்ளிய கும்பல்…!!

Read Time:5 Minute, 39 Second

201604051629535176_young-girl-molested-near-thiruvananthapuram_SECVPFசெல்போனில் ஆபாசபடம் எடுத்து அதன்மூலம் இளம்பெண்ணை மிரட்டி விபசாரத்தில் தள்ளிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல்லை அடுத்த அயிரூர் பகுதியை சேர்ந்த ஒரு ஏழ்மையான குடும்பத்தில் தந்தையை இழந்து தாயாரின் பராமரிப்பில் 15 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார்.

அந்த இளம்பெண்ணின் உறவினர் இஸ்மாயில் என்பவர் மட்டும் அந்த குடும்பத்திற்கு உதவியாக இருந்து வந்தார். அவரது பெற்றோர் விபத்தில் இறந்து விட்டதால் அவர் அந்த இளம்பெண்ணின் வீட்டிலேயே தங்கி இருந்தார். இஸ்மாயிலுக்கு குடிபழக்கம் இருந்ததால் அவர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே போதையில் கிடப்பது வழக்கம்.

இஸ்மாயிலின் நண்பர் அமீர். ஆட்டோ டிரைவரான இவர் இஸ்மாயிலை பார்ப்பதற்காக அடிக்கடி அவரது வீட்டிற்கு வருவது வழக்கம். அப்போது அந்த இளம்பெண்ணின் அழகு அமீரை மயக்கியது. எப்படியாவது அந்த பெண்ணை அடைய வேண்டும் என்று திட்டம் தீட்டினார்.

இந்த நிலையில் இஸ்மாயில் வெளியில் சென்று இருந்தபோது அமீரும் அவரது நண்பர் சமீர் என்பவரும் அங்கு சென்று அந்த இளம்பெண்ணிடம் இஸ்மாயில் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். மேலும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி அந்த பெண்ணை அமீர் தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றார். காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று அந்த பெண்ணை அமீரும், சமீரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.

மேலும் இந்த கொடூரத்தை தங்கள் செல்போனில் அவர்கள் படம்பிடித்துக் கொண்டனர். பிறகு அந்த பெண்ணை இதுபற்றி வெளியில் கூறினால் கொன்று விடுவதாகவும் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டிவிட்டு அவரது வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அதன் பிறகு அவர்கள் 2 பேரும் அந்த இளம் பெண்ணை செல்போன் காட்சிகளை காட்டி மிரட்டி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விபசாரத்தில் ஈடுபடுத்த தொடங்கினார்கள்.

அவர்களின் கொடுமை தாங்கமுடியாமல் அந்த இளம்பெண் மறுத்தபோது சிகரெட்டால் சூடு போட்டு சித்ரவதை செய்துள்ளனர். மேலும் அவருக்கு கஞ்சா உள்பட போதை மருந்துகளை வலுக்கட்டாயமாக கொடுத்து தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆற்றிங்கல் பஸ்நிலையம் அருகே ஆட்டோவில் விபசாரத்திற்காக அந்த பெண்ணை அமீரும், சமீரும் அழைத்து சென்றபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணை அவர்கள் 2 பேரும் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பொது இடத்தில் பெண் தாக்கப்படுவதை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். உடனே அவர்கள் 2 பேரும் அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு ஆட்டோவில் தப்பி சென்றுவிட்டனர்.

பொதுமக்கள் அந்த பெண்ணை ஆற்றிங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் தனக்கு நேர்ந்த கொடூரத்தை கூறி அந்த பெண் கதறி அழுதார். அமீர், சமீர் ஆகியோருக்கு மேலும் பலர் உதவியாக இருந்ததாகவும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக அனூப்ஷா (வயது 21), ஷாகன் (19), சல்மான் (19), சாகித் (21), சூரத் (32), அல்அமின் (21), ஷாம்நாத் (21) ஆகிய 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஆட்டோ டிரைவர் அமீர் அவரது நண்பர் சமீர் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். அவர்கள் இருவரும் பிடிபட்டால்தான் இந்த பெண்போல வேறு யாராவது இந்த கும்பலால் பாதிக்கப்பட்டு உள்ளார்களா? என்பது தெரிய வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 9 வயது மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குடும்பஸ்தன்..!!
Next post அசாம், மேகாலயாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!!