குடும்பப் பெண் தற்கொலை..!!
Read Time:1 Minute, 23 Second
ஏறாவூர் – மதுரங்காட்டு கொலனி, சித்தாண்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சண்முகலிங்கம் லுஜிதா என்ற 20 வயதுடைய பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது வீட்டு பூஜை அறையில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது ஒரு வயதுடைய கைக் குழந்தையை தனது தாயிடம் ஒப்படைத்து விட்டு, நைலோன் கயிற்றினால் சுருக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, கரடியனாறு பிரதேச வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரின் மேற்பார்வையில் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating