36 வயது காதலி கழுத்து வெட்டிக் கொலை; 30 வயது காதலனைத் தேடும் பொலிஸார்…!!

Read Time:2 Minute, 32 Second

Murder-knifeC-300x1806 வய­தான தனது காத­லியின் கழுத்தை கத்­தியால் வெட்டி கொலை செய்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நபரைக் கைது செய்ய நட­வ­டிக்கை மேற்­கொண்டு வரு­வ­தாக கொட­வே­ஹர பொலிஸார் தெரி­வித்­தனர்.

கொட­வே­ஹர குரு­பொ­குண எனும் பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்ள இச்­சம்­ப­வத்தில் கொலை செய்­யப்­பட்ட பெண்­ணுடன் சில கால­மாக சட்­ட­ரீ­தி­யற்ற முறையில் குடும்பம் நடாத்தி வந்த 30 வய­து­டைய நபரே இக்­கொ­லையைச் செய்­து­விட்டுத் தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

கொலை செய்­யப்­பட்ட பெண் தனது கணவர் மற்றும் மகள் ஆகி­யோ­ரை­விட் டுப் பிரிந்து கடந்த எட்டு வரு­டங்­க­ளாக தனி­யாக வாழ்ந்து வந்­துள்­ள­தா­கவும் இந் தக் காலப் பகு­தி­யினுள் அப்பெண் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பெற்றுச் சென்­றி­ருந்­த­தா­கவும் பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர்.

சம்­பவ தினம் குறித்த பெண் தேவை ஒன்றின் நிமித்தம் வீதியில் சென்று கொண்­டி­ருந்த போது குரு­பொ­குண சந்­தியில் வைத்து கத்தி ஒன்­றுடன் வந்­துள்ள சந்­தேக நபர் திடீ­ரென அப்­பெண்ணின் கழுத்தில் வெட்­டி­யுள்ளார்.

இதனால் அதிக இரத்தம் வெளி­யா­கிய நிலையில் அப்பெண் உட­ன­டி­யாக நிக்­க­வெ­ரட்டி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட போதும் அவர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

கொலை செய்­யப்­பட்ட பெண் மேலும் சில­ருடன் கள்ளத் தொடர்பில் ஈடு­ப­டு­வ­தா­கவும் இதனால் சந்­தேக நபர் அப்­பெண்­ணுடன் அடிக்­கடி சண்­டையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கொட வேஹர பொலிஸார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொல்கத்தா மேம்பால விபத்து கடவுள் விடுத்த எச்சரிக்கை: சொல்கிறார் பிரதமர் மோடி…!!
Next post இன்று முதல் பஸ்களில் ஆசன முன்பதிவு செய்ய முடியாது..!!