36 வயது காதலி கழுத்து வெட்டிக் கொலை; 30 வயது காதலனைத் தேடும் பொலிஸார்…!!
6 வயதான தனது காதலியின் கழுத்தை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கொடவேஹர பொலிஸார் தெரிவித்தனர்.
கொடவேஹர குருபொகுண எனும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் சில காலமாக சட்டரீதியற்ற முறையில் குடும்பம் நடாத்தி வந்த 30 வயதுடைய நபரே இக்கொலையைச் செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் தனது கணவர் மற்றும் மகள் ஆகியோரைவிட் டுப் பிரிந்து கடந்த எட்டு வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்துள்ளதாகவும் இந் தக் காலப் பகுதியினுள் அப்பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றிருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவ தினம் குறித்த பெண் தேவை ஒன்றின் நிமித்தம் வீதியில் சென்று கொண்டிருந்த போது குருபொகுண சந்தியில் வைத்து கத்தி ஒன்றுடன் வந்துள்ள சந்தேக நபர் திடீரென அப்பெண்ணின் கழுத்தில் வெட்டியுள்ளார்.
இதனால் அதிக இரத்தம் வெளியாகிய நிலையில் அப்பெண் உடனடியாக நிக்கவெரட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் மேலும் சிலருடன் கள்ளத் தொடர்பில் ஈடுபடுவதாகவும் இதனால் சந்தேக நபர் அப்பெண்ணுடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கொட வேஹர பொலிஸார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating