சிரியாவில் கடத்தப்பட்ட 175 தொழிலாளர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்…!!
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தொழிலாளர்களில் 175 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சிரியாவின் தலைநகரமான டமாஸ்கசில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அல் பாடியா என்ற சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சுமார் 300 தொழிலாளர்கள் மற்றும் காண்ட்ராக்டர்களை சில தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். பின்னர் அரசுப் படைகளுக்கு எதிராக சண்டை நடக்கும் பகுதிக்கு அவர்களை கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், சிரியா ராணுவம் மூலம் பெறப்பட்ட தகவல்களை சிரியா செய்தி ஏஜென்சியான சானா வெளியிட்டுள்ளது. அதில், கடத்தப்பட்ட 300 தொழிலாளர்களில் 175 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்று குவித்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை சிரியா தொழிற்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழிற்சாலையின் நிர்வாகிகள் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், திங்கட்கிழமை முதல் கடத்தப்பட்ட தொழிலாளிகளை தொடர்புக்கொள்ள முடியவில்லை என அச்சம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating