பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 18 தீவிரவாதிகள் பலி…!!

Read Time:1 Minute, 34 Second

201604081245152239_18-militants-killed-for-Pakistan-military-offensive_SECVPFபாகிஸ்தான் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 18 தீவிரவாதிகள் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் லோயர் குர்ரம் ஏஜென்சீஸ் பகுதி உள்ளது. அங்கு மஸ்கோரா சர் என்ற இடத்தில் சோதனை சாவடி உள்ளது.

நேற்று அதிகாலை அங்கு ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் எல்லைக்குள் 50 முதல் 60 தீவிரவாதிகள் புகுந்தனர். அதை பார்த்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

பதிலுக்கு தீவிரவாதிகளும் சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இச்சண்டை சுமார் 1 மணி நேரம் நடந்தது.

இதில் 18 தீவிரவாதிகள் பலியாகினர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். பல தீவிரவாதிகள் ஆயுதங்களை போட்டு விட்டு இருட்டில் தப்பி ஓடிவிட்டனர்.

அதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் 3 மாகாணங்கள் உள்ளன. அங்கு இது போன்று அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவரை சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா…!!
Next post ஈரோட்டில் இன்று காலை குடிநீர் குழாயில் வந்த குட்டி பாம்பு பொதுமக்கள் அதிர்ச்சி..!!