குளியலறையில் விபரீதம்: கொதிக்கும் வெந்நீரால் உடல் வெந்த 5 வயது சிறுவன்…!!
சீனாவில் வீட்டில் தனியாக இருந்த சிறுவர்கள் இருவர் குளியலறையில் வைத்து விளையாடியதில் வெந்நீர் பட்டு 5 வயது சிறுவனுக்கு உடல் வெந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான ஷன் ஷன் என்ற 5 வயது சிறுவனின் பெற்றோர் விவாகரத்து பெற்று வேறு நகரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
ஷன் ஷன் அவரது சகோதரருடன் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிறுவர்கள் இருவரும் குளியலறையில் விளையாடியதாக கூறப்படுகிறது.
அங்கு குளிப்பதற்கு பயன்படுத்துவதற்கு வெந்நீர் தயாராகிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுவர்களில் ஒருவர் விளையாட்டாக அந்த வெந்நீர் பாத்திரத்தை எடுத்து ஷன் ஷன் மீது கொட்டியதாக கூறப்படுகிறது.
கொதிக்கும் வெந்நீர் பட்டு அலறித்துடித்த அந்த சிறுவனை காப்பாற்றும் நோக்கில் அவரது சகோதரர் பிளாஸ்திரி தாளை பயன்படுத்தி காயங்களில் கட்டு போட்டதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே உடல் வெந்து குற்றுயிராக இருந்த சிறுவனுக்கு ஒட்டும் பிளாஸ்திரியால் காயத்தில் கட்டுப்போட்டது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது பாட்டியிடம் இருந்து தண்டனை பெறாமல் இருக்கவே ஷன் ஷன் மீது பிளாஸ்திரியால் கட்டு போட்டதாக சிறுவன் தெரிவித்துள்ளான்.
மாலை நேரம் வீட்டிற்கு திரும்பிய பாட்டியிடம் காயம் பட்ட சிறுவன் நடந்த சம்பவங்களை கூறியுள்ளான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி உடனடியாக சிறுவனை மருத்துவனைக்கு எடுத்து சென்றுள்ளார்.
மருத்துவமனையில் சிறுவன் ஷன் ஷன்னுக்கு தேவையான சிகிச்சைகள்அளிக்கப்பட்டது, மேலும் சிறுவனின் உடலில் 16 விழுக்காடு காயங்கள் கடுமையானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்கள் இருவரும் விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் என்னசெய்வதென்று அறியாமல் பிளாஸ்திரி பயன்படுத்தியிருக்கலாம் என அவர்களின் பாட்டி தெரிவித்துள்ளார்.
தற்போது குணமடைந்து வரும் ஷன் ஷன் விரைவில் முழுக்குணமடைய உரிய சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
ஆனால் தங்களிடம் போதிய பண வசதி இல்லை என்றும் அந்த சிறுவர்களின் தந்தைக்கு மாதா மாதம் கிடைக்கும் 219 பவுண்டு வருவாயில் தான் அந்த குடும்பமே பிழைப்பை நடத்தி வருவதாகவும் பாட்டி தெரிவித்துள்ளார்.
Average Rating