சிறுத்தை குட்டியை பூனை குட்டியென பிடித்தவர்கள்…!!
Read Time:1 Minute, 4 Second
தனிமையில் திரிந்த சிறுத்தை குட்டியொன்றை ஹட்டன் நேற்று இரவு அட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஹட்டன் அஜந்தா விடுதிக்கருகில் ரயில் கடவையிலே தனியாக சுற்றி திரிந்த சிறுத்தை குட்டி இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
பூனை குட்டியொன்று ரயில் கடவையில் திரிவதாக நினைத்து ஹட்டன் ரயில் கடவை ஊழியர்களினால் குறித்த மிருகம் மீட்கப்பட்ட நிலையில் அது சிறுத்தை குட்டியென இனம் காணப்பட்டபின் உடனடியாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த சிறுத்தை குட்டியை நல்லத்தண்ணி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கையளிக்கவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating