மசாஜ் மத்திய நிலையத்தில் விபச்சாரம் ; மூன்று பெண்கள் கைது…!!
Read Time:1 Minute, 12 Second
வெள்ளவத்தை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் மத்திய நிலையம் என்ற போர்வையின் கீழ் பராமரித்து செல்லப்பட்டவிபச்சார விடுதி ஒன்று காவற்துறையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றிற்கமைவாக, நீதி மன்றின் உத்தரவின் படி நேற்று இரவு காவற்துறை இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டது.
இதன்போது சிலாபம், அக்மீமன மற்றும் பனாகொடை பிரதேசத்தினை சேர்ந்த 22 , 24 மற்றும் 29 வயதுக்குற்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் புதுக்கடை இலக்கம் இரண்டு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் வெள்ளவத்தை காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
Average Rating