ரஷியாவில் போலீஸ் நிலையம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் – குண்டுவெடிப்பு..!!
Read Time:58 Second
தெற்கு ரஷியாவின் ஸ்டாவ்ரோபோல் மாகாணத்தில் உள்ள போலீஸ் நிலையம் அருகே இன்று அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதலும் குண்டுவெடிப்பும் நிகழ்ந்துள்ளது.
தற்கொலப்படை தீவிரவாதி உள்பட சுமார் மூன்று பேர் நடத்திய இந்த தாக்குதலில் ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி வெடித்துச் சிதறியதாகவும், அடுத்ததாக அங்கே மேலும் ஒரு குண்டு வெடித்ததாகவும் மூன்று தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Average Rating