சங்கரன்கோவில் அருகே 10–ம் வகுப்பு பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை..!!
சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூரை சேர்ந்தவர் சந்தணப்பாண்டியன். இவர் லாரி டிரைவராக உள்ளார். இவருக்கு கோபிநாத் (வயது16) உள்பட 3 மகன்கள் இருந்தனர்.
கோபிநாத் சங்கரன் கோவிலில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 2 பாடங்கள் சரியாக எழுதவில்லை. இதனால் கோபிநாத்துக்கு தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறினார். உடனே ஆத்திரம் அடைந்த அவரது பெற்றோர், கோபிநாத்தை ஏன் சரியாக தேர்வு எழுதவில்லை என கண்டித்துள்ளனர். இதனால் கோபிநாத் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நேற்று நள்ளிரவில் கோபிநாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating