தந்தையை கொலை செய்த மகள் கைது..!!
Read Time:1 Minute, 1 Second
தொடங்கொட- கினகஸ்மான- ருவன்கம பிரதேசத்தில் தனது தந்தையை கொலை செய்த மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவரின் சடலம் அவரது வீட்டுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டதாகவும் சடலத்தின் மீது அசிட் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாகவே குறித்த நபர் கொல்லப்பட்டார் என சந்தேகம் கொள்வதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் 50 வயதுடையவர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்யுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடங்கொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Average Rating