சூலூர் அருகே 6–ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை: வீட்டு உரிமையாளர் கைது..!!

Read Time:2 Minute, 34 Second

201604131649406783_6th-class-student-torture-arrested-house-owner_SECVPFசூலூர் அருகே 6–ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கோவை சூலூர்பட்டணத்தை சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). லாரி கிளீனர். இவர் வாடகை வீட்டில் மனைவி, மகன், 2 மகள்களுடன் வசித்து வருகிறார். இவரது இளைய மகள் ராணி(வயது 12– பெயர் மாற்றப்பட்டுள்ளது) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6–ம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் வசிக்கும் வீட்டு உரிமையாளர் லட்சுமணன் (வயது 55). நேற்று முன்தினம் லட்சுமணினின் மனைவி தனது மகளை பார்க்க வெளியூர் சென்று விட்டார்.

வீட்டில் தனியாக இருந்த லட்சுமணன், ராஜா வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது ராஜாவின் மனைவியிடம் நான் வீட்டில் தனியாக இருக்கிறேன், உனது மகளை வேண்டுமானால் எங்கள் வீட்டில் தங்க அனுப்பி வைக்குமாறு கூறினார். வழக்கமாக ராணி, லட்சுமணன் வீட்டிற்கு சென்று விளையாடுவார் என்பதால் அவரது தாயாரும் அனுப்பி வைத்தார்.

சிறிது நேரத்தில் ராணி அழுதபடி வீட்டுக்கு ஓடி வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் எதற்காக அழுகிறாய்? என கேட்ட போது லட்சுமணன் தன்னிடம் அத்துமீறி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறி கதறி அழுதார். இதைக் கேட்டு மாணவியின் தாயார் ஆவேசமடைந்தார்.இவர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக் டர் பார்வதி விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக மாணவியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் லட்சுமணன் மீது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டம் 2012–ன் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 21 வயது இந்தியரை காதலித்து மணந்த 41 வயது பெண்…!!
Next post மது அருந்திய 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு…!!