மது அருந்திய 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு…!!

Read Time:1 Minute, 38 Second

94f95801-3d3d-42b2-ae94-0352f0d4e9d5புதுவருடத்தை கொண்டாடும் வகையில் நண்பர்கள் இணைந்து நண்பர் ஒருவரின் வீடு ஒன்றிற்கு அருகில் மது அருந்தி கொண்டிருந்த வேளையில் போதை அதிகமானதால் நபர் ஒருவர் தவறி வீழ்ந்து சுயநினைவை இழந்துள்ளார்.

அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற முச்சக்கரவண்டி வீதியில் உள்ள மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் சுயநினைவு இழந்த மேற்படி நபர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பூண்டுலோயா – நாவலப்பிட்டி பிரதான வீதியின் கலப்பிட்டிய பிரதேசத்தின் 13.04.2016 அன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் இராவணகொட – மல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய எம்.டபிள்யூ.டீ குமாரபால என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மல்தெனிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூலூர் அருகே 6–ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை: வீட்டு உரிமையாளர் கைது..!!
Next post நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவர் மாயம்..!!